Home  
Login  |  Sign Up
Bookmark and Share
Home   Gallery   Map   Upload

DeviG ,Kalayar Koil 

ஊருக்குப் போகும் போதெல்லாம்
ஒதுங்கியே நிற்கிறான் என் மகன்!!

ஆண்டிற்கு ஒரு முறை என்
அவதாரம் என்பதால்
அருகில் வர மறுக்கிறான்!!

கெஞ்சிப் பேசி
கொஞ்சுவதற்க்குள்
வந்து விட்டது என்
வருகை நாள்
வளைகுடாவிற்கு!!

மொத்தமாய் அழுது
மெதுவாய் அவனருகில் சென்றால்
சப்தமாய் கதறி என்
சட்டையை பிடித்து சொல்லுகிறான்
போகாதே என்று!!

சிரித்துக் கொண்டே
கூடவே அழுதுக் கொண்டே அவன்
கன்னத்தில் முத்தமிட;
என் கழுத்து மட்டும்
சரணடைந்துப் போனது
அவனின் பிஞ்சுக் கரத்தினில்!!

ஆறுதல் சொல்லி அவன்
அம்மா அவனை தூக்க;
அவளுக்கு நான்
ஆறுதல் சொல்ல முடியாதவனாய்!!
anonymous
[User not registered]

 View all



Location: India

Uploaded on July 2, 2010
Taken with a NIKON D40
Taken on 2010:01:14 18:35:28

more info
793 views

Comments

Leave a comment. Please Login or Sign Up first.